Monday 9 March 2015

activity of Noolaga Desam Iyakkam

By
தருமபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் முதன் முறையான, முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி..


சிறுவர் பிரிவு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பங்கு வகித்தமைக்காக இந்த எளியவனுக்கு மாவட்ட நூலக அதிகாரி அவர்களும், மாவட்ட மைய நூலகர் அவர்களும் புத்தகம் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.. என் உளமார்ந்த நன்றிகள்.

நன்றிகள்! நூலக தேசம் இயக்கம் சார்பாக நம் தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் புரவலராக இணைய திரு. வினோத் நரசிம்மன் (நிறுவனர், இந்தியன் பில்லர்ஸ், சமூக சேவை அமைப்பு) அவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டோம். அவர் மனம் மகிழ்ந்து உடேன புரவலராக இணைந்து கொண்டார். அவரின் சேவைகள் தொடர நம் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர் நம் நூலக தேசம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர் என்பது மிகவும் குறிப்பிட தக்கது


நூலக தேசம் இயக்கம் (Lead India Foundation) சார்பாக வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரியில் நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 65 மாணவ மாணவியர்கள் தங்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வரிடம் மாவட்ட நூலக அதிகாரி திரு. து. சின்னத்தம்பி அவர்கள் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அருகில் நூலகர் திரு. ராஜேந்திரன் அவர்கள், திரு. ரமேஷ்கார்த்திக் (நிறுவனர், Lead India Foundation)


தருமபுரி மாவட்டம், மாவட்ட மைய நூலகத்தில் விலையில்லா கற்றல் உபகரண பெட்டிகள் வழங்கல் மற்றும் சி.சி.டி.வி துவக்க விழா துவங்கும் முன்பு, மாவட்ட நூலக அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன்


நிலச்சீரழிவு மற்றும் வறட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை, தருமபுரி மாவட்டம் சின்ன தடங்கம் என்கிற கிராமத்தில் மேற்கொண்டனர். என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.



நூலக தேசம் இயக்கம் சார்பாக "நூலகத்தின் அவசியம் குறித்தும், புத்தகங்களின் பயன்பாடு குறித்தும்" கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தபோது. 19.02.2015
நன்றி: My Dharmapuri
 






0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by Studio world Enhanced by pavithrankk

Post a Comment

Stay Connected..