ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகும். இந்த தினத்தில் நூலக தேசம் இயக்கம் மற்றும் அகத்தியர் கல்வி நிலையம் இணைந்து பல்வேறு போட்டிகளை நடத்தியது. அதில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு தருமபுரி சம்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்களும், இந்தியன் பில்லர்ஸ் நிறுவனர் திரு. வினோத் நரசிம்மன் அவர்களும், அரிமா. திரு. தாஜீதீன் அவர்களும், தொழில் அதிபர் திரு. ப்ரதீப் அவர்களும், கல்வியாளர்கள் திரு. ஹரிகிருஷ்ண பாண்டியன், கல்வியாளர் திரு. ரமணி அவரகளும், கல்லூரி விரிவுரையாளர் திரு. சதீஷ் குமார் அவர்களும், மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
இதில் மாதவம் இதழ் திரு. பாஸ்கர் (சட்ட மன்ற உறுப்பினர், தருமபுரி) அவர்களால் வெளியிடப்பட்டது.
நம்குடும்பம் இதழ் திரு. பாஸ்கர் (சட்ட மன்ற உறுப்பினர், தருமபுரி) அவர்களால் வெளியிடப்பட்டது
புதுவரவு இதழ் திரு. பாஸ்கர் (சட்ட மன்ற உறுப்பினர், தருமபுரி) அவர்களால் வெளியிடப்பட்டது.
நம் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு இடையராத பணிகளுக்கிடையே, நம் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கி, தேர்வுகளில் வெற்றி பெற ஆலோசனைகளும் வாழ்த்துக்களும் வழங்கினார்கள். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். அவரின் எளிமையான அனுகுமுறையை கண்டு வியந்தனர்.
அரிமா. திரு. தாஜீதீன் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் திரு. ஹரிகிருஷ்ண பாண்டியன் அவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்திய போது..
நிகழ்ச்சியில் அகத்தியர் கல்வி நிலையம் சார்பாக கல்வியாளர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் நம் சிறப்பு விருந்தினர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய போது
0 comments:
Post a Comment